ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிப்பு: சரமாரியாக தாக்கிய இஸ்ரேல் விமான படை - முழு விவரம்
ஸ்ரேல் விமானப்படை நேற்று சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், ஈரானின் 4 அணுசக்தி தளங்கள், 2 ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்ததாக்குதலில் ஈரானின் 6 அணுசக்தி விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர்.

தெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை நேற்று சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், ஈரானின் 4 அணுசக்தி தளங்கள், 2 ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்ததாக்குதலில் ஈரானின் 6 அணுசக்தி விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர்.
அணுஆயுதம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான யுரேனியம்,ஈரானிடம் சுமார் 275 கிலோ வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த யுரேனியம் தற்போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 90 சதவீதம் அளவுக்கு இதை செறிவூட்டினால் அணுகுண்டு தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை 5 கட்ட பேச்சு நடத்தியும், எந்தஉடன்பாடும் எட்டப்படவில்லை.
What's Your Reaction?