‘ஈத்துவக்கும் ஈகைத் திருநாள் ரமலான்’
புனித ரமலான் மாதம் நோன்பு நோற்று முடித்த பின் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பெருநாள் 'ஈதுல் ஃபித்ர்' என்று அழைக்கப்படுகிறது. 'ஈது' என்ற வார்த்தைக்கு 'பெருநாள்' என்றும், 'பித்ர்' எனும் அரபிச் சொல்லுக்கு 'நோன்பை விடுதல்' என்றும் பொருள் கொள்ளலாம்.

புனித ரமலான் மாதம் நோன்பு நோற்று முடித்த பின் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பெருநாள் 'ஈதுல் ஃபித்ர்' என்று அழைக்கப்படுகிறது. 'ஈது' என்ற வார்த்தைக்கு 'பெருநாள்' என்றும், 'பித்ர்' எனும் அரபிச் சொல்லுக்கு 'நோன்பை விடுதல்' என்றும் பொருள் கொள்ளலாம்.
நோன்பு முடிந்ததின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக, இஸ்லாமிய சகோதரர்கள் ஷவ்வால் மாதத்தின் பிறை தென்பட்டவுடன் 'சதகத்துல் ஃபித்ர்' எனும் ஏழைகளுக்கு வழங்க வேண்டிய தர்மத்தை வழங்கத் தொடங்குவர். தெரிந்தோ தெரியாமலோ நோன்பில் ஏற்பட்ட சிறு தவறுகள் இந்த ஃபித்ர் தர்மத்தால் நீக்கப்பட்டு நோன்பு முழுமை பெறும்.
What's Your Reaction?