இலங்கையின் புதிய அமைச்சர்கள், ஒதுக்கப்பட்ட துறைகளும் - முழு விவரம்
இலங்கையில் அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கொழும்பு: இலங்கையில் அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இலங்கையில் அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் 21 கேபினெட் அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கான இலாக்காங்களை அதிபர் அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். அதில், பாதுகாப்பு, நிதி, திட்டம், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகள் தன் வசம் இருக்கும் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பிரதம அமைச்சரான (பிரதமர்) ஹரினி அமரசூரியவுக்கு கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
What's Your Reaction?