இன்று சினிமாவை அழிப்பது சுயநலம் தான்: இயக்குநர் பேரரசு
இன்று சினிமாவை அழிப்பது சுயநலம் தான் என்று ‘இரவின் விழிகள்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார். மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இரவின் விழிகள்’.

இன்று சினிமாவை அழிப்பது சுயநலம் தான் என்று ‘இரவின் விழிகள்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் மகேந்திரா, சிக்கல் ராஜேஷ், நீமா ரே, நிழல்கள் ரவி, அஸ்மிதா, கும்தாஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?