இந்தியாவில் தடம் பதிக்கிறது டெஸ்லா - நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை: டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தனது இந்திய வருகையை அந்நிறுவனம் சூசகமாக அறிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த தகவலை ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர் மற்றும் பேக்-எண்ட் குழு என சுமார் 13 ரோலுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு லிங்க்ட்இன் தளத்தில் வெளியாகி உள்ளது. ஸ்டோர் மேனேஜர், சர்வீஸ் மேனேஜர், கஸ்ட்மர் சப்போர்ட் எக்ஸிக்யூட்டிவ் என இந்த பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
What's Your Reaction?