இந்தியாவின் தடை காரணமாக பாதிப்பு: பாகிஸ்தானில் சரக்கு கட்டணம் கடும் உயர்வு
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து வரும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை இந்திய துறைமுகங்கள் வழியாக (கப்பல் மூலம்) நேரடியாகவும் மறைமுகமாகவும் கொண்டு செல்ல மத்திய அரசு தடை விதித்தது.

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து வரும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை இந்திய துறைமுகங்கள் வழியாக (கப்பல் மூலம்) நேரடியாகவும் மறைமுகமாகவும் கொண்டு செல்ல மத்திய அரசு தடை விதித்தது. இதனால் கடல்சார் தளவாட போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், விதிமீறல்களை கண்டறிவதற்கான சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையின்படி இதுவரை ரூ.9 கோடி மதிப்புள்ள 1,100 டன் பொருட்களை ஏற்றிச் சென்ற 39 கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பொருட்கள் ஐக்கிய அரபு அமீரக பொருட்கள் என தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது சோதனையில் தெரியவந்தது.
What's Your Reaction?