இந்தியாவின் சந்திரயான்கள்! | ஆக.23 - தேசிய விண்வெளி நாள்

நிலவை ஆய்வு செய்வதற்கான போட்டி எப்போதோ தொடங்கிவிட்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாகவே அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தன.

Aug 23, 2025 - 16:10
 0  3
இந்தியாவின் சந்திரயான்கள்! | ஆக.23 - தேசிய விண்வெளி நாள்

நிலவை ஆய்வு செய்வதற்கான போட்டி எப்போதோ தொடங்கிவிட்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாகவே அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தன. நிலவுக்கு விண்கலம் அனுப்புவது என்பது லேசுப்பட்ட காரியமும் அல்ல. வல்லரசு நாடுகள் மட்டும்தான் இதில் ஈடுபட முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், பின்னாளில் இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்தது.

முதல் விதை: நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை உலகின் பெரிய நாடுகள் உணர்ந்தி ருக்குமா என்பது தெரியாது. ஆனால், அதற்கான விதையை 2003இல் இட்டவர் மறைந்த பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். அந்த ஆண்டு சுதந்திர தின உரையில் வாஜ்பாய் பேசும்போது, “நிலவை நோக்கிய இந்தியாவின் கனவுத் திட்டம் தொடங்கிவிட்டது; நிலவுக்கு விரைவில் விண்கலம் அனுப்பப்படும்” என்று சந்திரயான் திட்டம் குறித்த தகவல்களை வாஜ்பாய் வெளியிட்டார். 2004-2005இல் இத்திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow