“இந்தியா பட்டம் வெல்ல கோலி, ரோஹித் ஃபார்ம் அவசியம்” - முத்தையா முரளிதரன் @ சாம்பியன்ஸ் டிராபி
எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பட்டம் வெல்ல விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் ஃபார்மில் இருக்க வேண்டியது அவசியம் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பட்டம் வெல்ல விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் ஃபார்மில் இருக்க வேண்டியது அவசியம் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.
What's Your Reaction?