ஆஸ்திரேலிய தொடரில் ரன்கள் குவிக்காவிட்டால் கோலி, ரோஹித் நிலைமை என்னவாகும்? - அஜித் அகர்கர் விளக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி களமிறங்க உள்ளனர். 7 மாதங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர்.

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி களமிறங்க உள்ளனர். 7 மாதங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர்.
டெஸ்ட், டி20 வடிவங்களில் இருந்து இருவரும் ஏற்கெனவே ஓய்வு பெற்று விட்டதால் 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு இப்போது இருந்தே சிறந்த திறனை வெளிப்படுத்தி ரன்கள் குவிக்க வேண்டும், இல்லையென்றால் அணியில் இடம் பெறுவது கடினம் என ஊகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
What's Your Reaction?