இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா சாதனை: 18 நாட்களுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கியது விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்த இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்கலத்தில் பூமிக்குத் திரும்பினார். அவரது விண்கலம் நேற்று பிற்பகல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பசிபிக் கடலில் பத்திரமாக இறங்கியது.

Jul 16, 2025 - 01:35
 0  4
இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா சாதனை: 18 நாட்களுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கியது விண்கலம்

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்த இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்கலத்தில் பூமிக்குத் திரும்பினார். அவரது விண்கலம் நேற்று பிற்பகல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பசிபிக் கடலில் பத்திரமாக இறங்கியது.

தனியார் நிறுவனமான அக்ஸியம் ஸ்பேஸ், அமெரிக்கவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு டிராகன் விண்கலத்தை அனுப்பின. இதில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடியுடன் சுக்லா உரையாடினார். மேலும், திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோவை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடனும் சுக்லா கலந்துரையாடினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow