இந்திய தடகள வீராங்கனை சஸ்பெண்ட்
தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்திய தடகள வீராங்கனை ட்விங்கிள் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி: தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்திய தடகள வீராங்கனை ட்விங்கிள் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
28 வயதாகும் ட்விங்கிள் சவுத்ரி, இந்த ஆண்டு உத்தராகண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியின் 4x400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். மேலும் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்திலும் வெண்கலமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் அவர் வென்றிருந்தார்.
What's Your Reaction?