இந்திய அணியின் உச்சம்: ஹெடிங்லே டெஸ்ட் சுவாரஸ்ய ‘டேட்டா’ துளிகள்
ஹெடிங்லேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முந்தைய முடிவுகளை முன்வைத்து இங்கிலாந்து கேப்டன் தவறாக இந்திய அணியை பெட் செய்ய அழைத்ததில் இந்தியா அபாரமாக ஆடி ஜெய்ஸ்வால், கேப்டன் கில் சதங்களுடனும், ரிஷப் பந்தின் அதிரடியுடனும் முதல் நாளில் 359 ரன்களைக் குவித்தது.

ஹெடிங்லேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முந்தைய முடிவுகளை முன்வைத்து இங்கிலாந்து கேப்டன் தவறாக இந்திய அணியை பெட் செய்ய அழைத்ததில் இந்தியா அபாரமாக ஆடி ஜெய்ஸ்வால், கேப்டன் கில் சதங்களுடனும், ரிஷப் பந்தின் அதிரடியுடனும் முதல் நாளில் 359 ரன்களைக் குவித்தது. முதல் நாள் ஆட்டத்தில் சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.
ஒரே நாளில் ஹெடிங்லேயில் 359 ரன்களை எடுத்தது இந்திய அனியின் புதிய உச்சமாகும். அதாவது, இங்கிலாந்து மண்ணில் முதல் நாளில் டெஸ்ட் போட்டியில் எடுத்த அதிக ரன்களாகும் இது. இதற்கு முன்பாக 2022-ல் எட்ஜ்பாஸ்டனில் 338 ரன்களை ஒரே நாளில் எடுத்தது. மேலும், இங்கிலாந்துக்கு பயணம் செய்த அணிகளில் ஒரே நாளில் 359 ரன்கள் என்பது இரண்டாவது பெரிய தொடக்க நாள் ஸ்கோராகும். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா 2003-ல் 362/4 என்று எடுத்ததே அதிகபட்சம்.
What's Your Reaction?