‘இந்திய அணிக்கு நியாயமற்ற துபாய் சாதகம்?’ - வாசிம் ஜாஃபர் சொல்லும் தீர்வு

“ஐசிசி இந்திய அணியை ஒரு போட்டியை ஷார்ஜாவிலும் ஒரு போட்டியை அபுதாபியிலும் ஒரு போட்டியை துபாயிலும் ஆடக் கேட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் பயணமும் இருந்திருக்கும் கண்டிஷன்களும் வேறு வேறாக இருந்திருக்கும் இன்று எழும் விமர்சனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

Feb 28, 2025 - 17:25
 0  4
‘இந்திய அணிக்கு நியாயமற்ற துபாய் சாதகம்?’ - வாசிம் ஜாஃபர் சொல்லும் தீர்வு

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை எந்தவித களைப்பேற்படுத்தும் பயணமோ, பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைக்குத் தக்கவாறு தேர்வு செய்யப்பட வேண்டிய அணி என்ற தலைவலிகளோ இல்லாமல் ஒரு நிலையான அணியைத் தேர்வு செய்ய முடிவதோடு பயணக் களைப்பும் இல்லாமல் ஆட முடிவது அந்த அணிக்கு வழங்கப்பட்ட நியாயமற்ற சாதகம் என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருவது நாம் அறிந்ததே.

ஆனால், இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இந்த விமர்சனங்களை எழாமல் செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதாவது துபாய், அபுதாபி, ஷார்ஜா என்று இந்திய அணி மூன்று யு.ஏ.இ.லேயே 3 வித்தியாசமான மைதானங்களில் ஆடி, இத்தகைய விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow