இங்கிலாந்து அணி வீரரின் வழக்கமான புலம்பல்: பனிமூட்டமே காரணமாம்!

இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய ஸ்பின்னர்களை ஆடுவதற்கு பனிமூட்டம் இடைஞ்சலாக இருந்ததாக இங்கிலாந்தின் வைஸ் கேப்டன் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார். 

Jan 25, 2025 - 10:15
 0  10
இங்கிலாந்து அணி வீரரின் வழக்கமான புலம்பல்: பனிமூட்டமே காரணமாம்!

இங்கிலாந்து அணி இன்று சென்னையில் 2வது டி20 போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய ஸ்பின்னர்களை ஆடுவதற்கு பனிமூட்டம் இடைஞ்சலாக இருந்ததாக இங்கிலாந்தின் வைஸ் கேப்டன் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியினரை சுனில் கவாஸ்கர் ‘புலம்பல்வாதிகள்’ என்று எப்போதும் ஏளனம் செய்வார். அது என்னவோ உண்மைதான் என்பது போல் ஹாரி புரூக் கூறியுள்ளார். நிலைமைகள் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை, அதில் சமாளித்து மீண்டு வருவது தான் சவால் என்பது எந்த ஒரு விளையாட்டின் அடிப்படை அரிச்சுவடி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow