ஆர்சிபி-க்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்!
நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட் செய்கிறது.

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட் செய்கிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் கடந்த மார்ச் 25-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சுமார் 470 ரன்கள் குவிக்கப்பட்டது. டாஸின் போது ஆடுகளம் ரன் குவிக்க ஏதுவாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
What's Your Reaction?