“அஸ்வின் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை” - பத்ரிநாத் வருத்தம்

அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

Dec 20, 2024 - 00:10
 0  3
“அஸ்வின் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை” - பத்ரிநாத் வருத்தம்

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் இந்திய அணிக்காக விளையாடிய அஸ்வின். இந்நிலையில், அவரது ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

“அஸ்வினின் ஓய்வு முடிவு எனக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அவரை அணி நிர்வாகம் நியாமான முறையில் நடத்தவில்லை என்று நான் எண்ணுகிறேன். ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியின் போதே ‘நான் போறேன்’ என அவர் சொல்லியதாக ரோஹித் தெரிவித்தார். முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைத்தபோது அதை நேரடியாகவே அஸ்வின் சொல்லியுள்ளார். அதுவே அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பதை சொல்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow