151 ரன்களில் ராஜஸ்தானை கட்டுப்படுத்திய கொல்கத்தா: வருண், மொயீன் அபாரம்

நடப்பு ஐபிஎல் சீசனின் 6-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியை 151 ரன்களில் கட்டுப்படுத்தியது கொல்கத்தா

Mar 26, 2025 - 22:55
 0  4
151 ரன்களில் ராஜஸ்தானை கட்டுப்படுத்திய கொல்கத்தா: வருண், மொயீன் அபாரம்

குவாஹாட்டி: நடப்பு ஐபிஎல் சீசனின் 6-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியை 151 ரன்களில் கட்டுப்படுத்தியது கொல்கத்தா. குறிப்பாக கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் மொயீன் அலி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.

குவாஹாட்டியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தாவின் முக்கிய வீரரான சுனில் நரைன் விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக மொயீன் அலி அந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow