135 நகரங்களுக்கு ‘மாஸ்டர் பிளான்’ அரசு விரைவில் உருவாக்க வேண்டும்: ‘கிரெடாய்’ தமிழ்நாடு தலைவர் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள 135 நகரங்கள், சிறு நகரங்களுக்கான மாஸ்டர் பிளான்களை தமிழக அரசு விரைவில் உருவாக்கி தரவேண்டும் என கிரெடாய் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

May 22, 2025 - 11:40
 0  3
135 நகரங்களுக்கு ‘மாஸ்டர் பிளான்’ அரசு விரைவில் உருவாக்க வேண்டும்: ‘கிரெடாய்’ தமிழ்நாடு தலைவர் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள 135 நகரங்கள், சிறு நகரங்களுக்கான மாஸ்டர் பிளான்களை தமிழக அரசு விரைவில் உருவாக்கி தரவேண்டும் என கிரெடாய் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான ‘கிரெடாய்’ அமைப்பின் தமிழ்நாடு தலைவர் எஸ்.ஹபிப், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2025-27-ம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் கிரெடாய் அமைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே உள்ள 10 மண்டலங்களுடன் சிவகங்கை, வேலூர், கரூர், நீலகிரி, தஞ்சாவூர் ஆகிய 5 இடங்களிலும் கிரெடாய் அமைப்பு தொடங்கப்பட உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow