வங்கிக் கிளைகளில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் தேவை - மத்திய அரசுக்கு வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

வங்கி ஊழியர்கள் மீது வாடிக்கையாளர்கள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவதால், அனைத்து வங்கிக் கிளைகளிலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களை பணியமர்த்த வேண்டும் என, வங்கி ஊழியர் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.

Feb 18, 2025 - 18:45
 0  4
வங்கிக் கிளைகளில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் தேவை - மத்திய அரசுக்கு வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: வங்கி ஊழியர்கள் மீது வாடிக்கையாளர்கள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவதால், அனைத்து வங்கிக் கிளைகளிலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களை பணியமர்த்த வேண்டும் என வங்கி ஊழியர் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு மற்றும் வங்கி நிர்வாகங்களின் கொள்கைகள் காரணமாக, வங்கிகளில் புதிய ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. இதனால், வங்கிகளில் ஊழியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் வங்கிகளில் 2 லட்சம் ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow