பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார். அவருக்கு வயது 87.

Feb 4, 2025 - 23:15
 0  3
பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

சென்னை: பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார். அவருக்கு வயது 87.

வயது மூப்பு காரணமாக பழம்பெரும் நடிகையும், நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா செவ்வாய்க்கிழமை (பிப்.04) காலமானார். தமிழில் 1958ஆம் ஆண்டு வெளியான ’செங்கோட்டை சிங்கம்’ படம் மூலம் புஷ்பலதா அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். ரஜினியின் ‘நான் அடிமை இல்லை’, கமல்ஹாசனின் ‘கல்யாணராமன்’, ‘சகலகலா வல்லவன்’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow