“நான் இந்திய அணியில் இல்லாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - முகமது சிராஜ்
நடப்பு ஐபிஎல் சீசனின் 19-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுதான் அவரது சிறந்த பவுலிங் பர்ஃபாமென்ஸ்.

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 19-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுதான் அவரது சிறந்த பவுலிங் பர்ஃபாமென்ஸ்.
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக பல சோதனைகளை சிராஜ் எதிர்கொண்டார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை தக்கவைக்க தவறியது போன்றவற்றை சொல்லலாம். இது குறித்து அவரும் வெளிப்படையாக பேசி இருந்தார். தன்னால் சிறந்த முறையில் பந்து வீச முடியும் என்ற நம்பிக்கையை தனது பேச்சில் வெளிப்படுத்தினார். இப்போது அதை களத்தில் செய்து கொண்டுள்ளார்.
What's Your Reaction?