தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சி படை கைப்பற்றியது: சிரியா அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியது. நாட்டில் பதற்றம் அதிகரித்ததால், அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்.

Dec 9, 2024 - 06:10
 0  4
தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சி படை கைப்பற்றியது: சிரியா அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

டமாஸ்கஸ்: மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியது. நாட்டில் பதற்றம் அதிகரித்ததால், அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் ராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ் அல் ஆசாத் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். 29 ஆண்டுகள் சிரியா அதிபராக இருந்த அவர் 2000-ம் ஆண்டில் காலமானார். அவரது மகன் பஷார் அல் ஆசாத் கடந்த 2000 ஜூலை 17-ம் தேதி அதிபரானார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow