‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ உடன் இணைந்து மாணவர்களால் செயற்கைக்கோள் தயாரிக்க இலங்கை நிறுவனம் திட்டம்
இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விண்வெளி ஆய்வில் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் செயற்கைக்கோள் திட்டத்தைத் துவங்க ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் ,இலங்கையின் SLITT Northern Uni புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

சென்னை: உலக விண்வெளி வாரத்தையொட்டி, இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விண்வெளி ஆய்வில் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் அவர்கள் தலைமையிலான செயற்கைக்கோள் திட்டத்தைத் துவங்க ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனத்துடன் (Space Kidz India), இலங்கையின் SLITT Northern Uni புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்ஸ்பேஸ் அகமதாபாத், இயக்குனர் டாக்டர் பிரபுல்ல குமார் ஜெயின்,SLITT Northern Uni தலைவர் இண்டி பத்மநாதன், ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனர் மற்றும் தலைமைசெயல் அதிகாரி ஸ்ரீமதி கேசன், உலக விண்வெளி வார சங்கத்தின் நிர்வாக இயக்குனர் அல்மா ஓக்பலேப் மற்றும் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் கையெழுத்தானது.
What's Your Reaction?