வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாக திருவிழா நேற்ற கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை / சிறுவாபுரி: சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாக திருவிழா நேற்ற கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிறுவாபுரி முருகன் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நாளை ஒட்டி பெரும்பாலான முருகன் கோயில்களில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறும்.
அந்த வகையில், இந்த ஆண்டு பல்வேறு கோயில்களில் விழா நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அதிகாலையில் இருந்து பக்தர்கள் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
What's Your Reaction?