வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயற்சி: இந்திய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கில் 20 வயது இந்திய இளைஞர் சாய் வர்ஷித் கந்துலாவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Jan 17, 2025 - 13:30
 0  4
வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயற்சி: இந்திய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கில் 20 வயது இந்திய வம்சாவளி இளைஞர் சாய் வர்ஷித் கந்துலாவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான சந்தா நகரில் பிறந்த சாய் வர்ஷித் கந்துலா, கிரீன் கார்டுடன் அமெரிக்காவில் சட்டப்பூர்வமான நிரந்தர குடியிருப்பாளராக இருந்தார். நீதிமன்ற ஆவணங்களின்படி, சாய் வர்ஷித் கந்துலா மே 22, 2023 அன்று மதியம் மிசோரியின் செயிண்ட் லூயிஸிலிருந்து வாஷிங்டன் டி.சி.க்கு விமானத்தில் சென்றுள்ளார். அன்று மாலை 5:20 மணியளவில் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவர், மாலை 6:30 மணிக்கு ஒரு லாரியை வாடகைக்கு எடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow