வரலாறு காணாத புதிய உச்சம்: கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்குகிறது - தங்கம் ஒரு பவுன் ரூ.77 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் ஒரே நாளில் ரூ.680 அதிகரித்து, தங்கம் பவுன் விலை முதல்முறையாக ரூ.77 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னை: சென்னையில் ஒரே நாளில் ரூ.680 அதிகரித்து, தங்கம் பவுன் விலை முதல்முறையாக ரூ.77 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதுடன், தங்கத்தில் முதலீடும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது.
What's Your Reaction?