ரூ.300 கோடி வசூலை கடந்தது ‘மகாவதார் நரசிம்மா’
இந்தி, கன்னடா, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகியுள்ள ‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் ரூ.300 கோடி வசூலை கடந்து மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது. விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’.

இந்தி, கன்னடா, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகியுள்ள ‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் ரூ.300 கோடி வசூலை கடந்து மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது.
விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. ஜூலை 25-ம் தேதி பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் இதர மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அனிமேஷன் திரைப்படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் வரவேற்பைப் பெற்று, வசூலை குவித்தது.
What's Your Reaction?