ரூ.135 கோடி மின் நிலுவையை உடனடியாக செலுத்த வேண்டும்: வங்கதேசத்துக்கு திரிபுரா அரசு எச்சரிக்கை
மின்சாரம் வாங்கியதற்கான நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கதேசத்திடம் திரிபுரா மாநிலம் அறிவுறுத்தியுள்ளது.

அகர்தலா: மின்சாரம் வாங்கியதற்கான நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கதேசத்திடம் திரிபுரா மாநிலம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான விரோதப் போக்கு அதிகரித்து வருகிறது. அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதுடன், கோயில்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இஸ்கான் கோயிலின் குரு சின்மயி கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு, இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கைதை கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
What's Your Reaction?