ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் பொறி வைத்துப் பிடித்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணி நேற்று மீண்டும் பேட்டிங் பிட்சில் தவறுகள் இழைத்து, பெரிய ஸ்கோரை எடுத்து இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்புகளைத் தடுக்கும் உத்திகளை விரயம் செய்ததாகவே தெரிகிறது. ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ராகுல், கருண் நாயர் செய்த தவறுகளை ஷுப்மன் கில் ஈடுகட்டினார்.

இந்திய அணி நேற்று மீண்டும் பேட்டிங் பிட்சில் தவறுகள் இழைத்து, பெரிய ஸ்கோரை எடுத்து இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்புகளைத் தடுக்கும் உத்திகளை விரயம் செய்ததாகவே தெரிகிறது.
ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ராகுல், கருண் நாயர் செய்த தவறுகளை ஷுப்மன் கில் ஈடுகட்டினார். அவர் 216 பந்துகளில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்காக 99 ரன்களைச் சேர்த்து ஓரளவுக்கு மீட்டுள்ளனர். ஆனால், இந்தியா பாதுகாப்பாக இருக்கிறதா, தோல்வியைத் தவிர்க்க முடியுமா என்பது கேள்வியே.
What's Your Reaction?