ராஜஸ்தான் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கிய 13 வயது ப்ளேயர் - யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி? 

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெறும் ஏலத்தின் 2-வது நாளான இன்று 13 வயது ப்ளேயரான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Nov 25, 2024 - 22:05
 0  4
ராஜஸ்தான் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கிய 13 வயது ப்ளேயர் - யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி? 

ஜெட்டா: ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெறும் ஏலத்தின் 2-வது நாளான இன்று 13 வயது ப்ளேயரான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் 2-வது நாளாக திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் 13 வயது சிறுவன் சூர்யவன்ஷிக்கு ரூ.30 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. அவரை தங்களது அணிகளுக்காக வாங்க ராஜஸ்தானும், டெல்லியும் போட்டி போட்டுக்கொண்டனர். டெல்லி தனது ஏலத்தை தொடங்கியது. ராஜஸ்தான் ரூ.45 லட்சம் கேட்க, டெல்லி ரூ.50 லட்சம் கோரியது. இறுதிவரை சென்ற ஏலத்தில் ரூ.1.10 கோடி கோரிய ராஜஸ்தான் சூர்யவன்ஷியை தனது அணிக்குள் இழுத்துக் கொண்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow