மார்டின் லூதர் கிங் ஜூனியர் 95-வது பிறந்தநாள்: நினைவுகூரத்தக்க மேற்கோள்கள் சில...

நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று (15 ஜனவரி).

Jan 15, 2025 - 12:30
 0  3
மார்டின் லூதர் கிங் ஜூனியர் 95-வது பிறந்தநாள்: நினைவுகூரத்தக்க மேற்கோள்கள் சில...

நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று (15 ஜனவரி). அவரது 95-வது பிறந்தநாளில் அவரைப் போற்றும் வகையில் அவருடைய சக்திவாய்ந்த, பிரபலமான மேற்கோள்கள் சிலவற்றை நினைவுகூர்கிறோம்.

* உண்மையான சமாதானம் என்பது பிரச்சினைகள் இல்லாமை அல்ல; மாறாக நீதி நிலவுதலே உண்மையான சமாதானம்.
* நமக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும்போது நாம் கையறு நிலையில், ஆடையற்று, நிற்கதியாக இருக்கச் செய்யப்படுகிறோம்.
* மனம் அடிமைப்பட்டு கிடக்கும் வரை உடல் விடுதலை காண இயலாது.
* நம்பிக்கையின் முதல் அடியை எடுத்து வையுங்கள். வெற்றிப்படிகளை முழுமையாகக் காணவிட்டாலும் கூட முதல் அடியை எடுத்து வையுங்கள்.
* எந்த ஒரு தேசமோ, அரசாங்கமோ தனிநபர் சுதந்திரத்தை மறுக்குமேயானால், அது அந்தத் தருணத்தில் குடிமக்களின் ஆன்மிக, தார்மிக கொள்கைகளை சிதைக்க ஆரம்பித்துவிடுகிறது எனலாம். அதேபோல் தனது சுந்திரம் பற்றி உணராத தனிநபர் தற்கொலை செய்துகொள்கிறார் என்றே அர்த்தம்.
* இருள் சூழ்ந்திருக்கும்போது தான் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியும்!
* அஹிம்சை சக்திவாய்ந்த், நியாயமான ஆயுதம். உண்மையில் உலகில் மிகவும் தனித்துவமான ஆயுதமும் அதுவே. ஏனெனில் அந்த ஆயுதம் காயங்கள் ஏற்படுத்தாது, அதை கையில் எடுப்பவரை உயரச் செய்யும்.
* நாம் வானத்தில் பறவைகள் போல் பறக்கவும், தண்ணீரில் மீன்களைப் போல் நீந்தவும் கற்றுக் கொண்டோம். ஆனால், மண்ணில் சகோதரத்துவத்துடன் வாழும் கலையை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.
* இருளை இருளால் விலக்க முடியாது. ஒளியால் மட்டுமே அது சாத்தியம். அதேபோல் வெறுப்பை வெறுப்பால் அகற்ற முடியாது அன்பால் மட்டுமே அது இயலும்.
* மனிதநேயத்தைப் பேணுவதை ஒரு தொழிலாக மேற்கொள்ளுங்கள். சம உரிமைகளுக்காகப் போராடுங்கள். அப்போது, உங்களை நீங்களே சிறந்த நபராக செதுக்குவீர்கள். உங்கள் நாட்டை உயர்த்துவீர்கள். இந்த உலகை வாழ்வதற்கு இதமான இடமாக்குவீர்கள்.
* போர் செய்யக் கூடாது’ என்று சொன்னால் மட்டும் போதாது. அமைதியை விரும்புவதும் அதற்காக தியாகம் செய்வதும் அவசியம். நாம் போரை எதிர்மறையாக வெளியேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், சமாதானத்தின் நேர்மறையான உறுதிமொழியில் கவனம் செலுத்த வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow