‘மதகஜராஜா’ ரிலீஸாக முயற்சித்தவர்களுக்கு பாராட்டு விழா: தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை
‘மதகஜராஜா’ வெளியீட்டுக்கு பெரும் முயற்சி எடுத்தவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘மதகஜராஜா’ வெளியீட்டுக்கு பெரும் முயற்சி எடுத்தவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த ‘மதகஜராஜா’ திரைப்படம், தற்போது வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் தமிழகத்தில் ஒட்டுமொத்த வசூலில் 50 கோடியைத் தாண்டும் என்று விநியோகஸ்தர்கள் கணித்திருக்கிறார்கள். இப்படம் சிக்கலில் இருக்கும் போது பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இப்போது தான் வெளியாகி இருக்கிறது. ‘மதகஜராஜா’ வெற்றியால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
What's Your Reaction?