மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூருவில் நடைபெற இருந்த போட்டிகள் மும்பைக்கு மாற்றம்

பெங்களூருவில் நடைபெற இருந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

Aug 23, 2025 - 10:25
 0  3
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூருவில் நடைபெற இருந்த போட்டிகள் மும்பைக்கு மாற்றம்

புதுடெல்லி: பெங்களூருவில் நடைபெற இருந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. 12 வருடங்களுக்குப் பிறகு மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக முதலில் வெளியிடப்பட்ட போட்டி அட்டவணையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆட்டங்கள் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow