போதைப் பொருள் கடத்தல்காரர் சுனில் யாதவ் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

போதைப் பொருள் கடத்தல்காரர் என்று அறியப்படும் சுனில் யாதவ் அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி பொறுப்பேற்றுள்ளார்.

Dec 25, 2024 - 03:05
 0  5
போதைப் பொருள் கடத்தல்காரர் சுனில் யாதவ் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

போதைப் பொருள் கடத்தல்காரர் என்று அறியப்படும் சுனில் யாதவ் அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்தவர் தாதா லாரன்ஸ் பிஷ்னோய். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12-ம் தேதி மகாராஷ்டிர மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் பொறுப்பேற்றது. இது உண்மையா என மகாராஷ்டிர போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் சல்மான் கானை கொல்லப்போவதாக லாரன்ஸ் ஏற்கெனவே அறிவித்த விவகாரமும் தற்போது கிளம்பியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள லாரன்ஸ் தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow