பொங்கல்: விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலை மோது கிறது

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு விமானங்களில் அதிக அளவில் மக்கள் செல்வதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. டிக்கெட் கிடைக்காதவர்கள், விமானங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும், விமான டிக்கெட்கள் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
What's Your Reaction?