பொங்கல் பண்டிகையால் மதுரையில் காய்கறிகள் விலை உச்சம்

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த காலத்தில் 1,000 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தநிலையில், இன்று வெறும் 400 டன் மட்டுமே விற்பனைக்கு வந்தது. பொங்கல் பண்டிகையால் காய்கறிகள் தேவை அதிகரிப்பால் விலை திடீரென்று உயர்ந்துள்ளது. 

Jan 11, 2025 - 21:10
 0  3
பொங்கல் பண்டிகையால் மதுரையில் காய்கறிகள் விலை உச்சம்

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த காலத்தில் 1,000 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தநிலையில், இன்று வெறும் 400 டன் மட்டுமே விற்பனைக்கு வந்தது. பொங்கல் பண்டிகையால் காய்கறிகள் தேவை அதிகரிப்பால் விலை திடீரென்று உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் 16 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், 3 1/2 லட்சம் ஹேக்டரில் அளவில் காய்கறிகள் சாகுபடி நடக்கிறது. தேசிய அளவில் காய்கறி உற்பத்தியில் முன்னனியில் இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. ஆனால், தமிழகத்தில் காய்கறிகள் தேவை அதிகமாக இருப்பதால், முக்கிய காய்கறிகள் வரத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வடமாநிலங்களையே நம்ப வேண்டி உள்ளது. அம்மாநிலங்களில் இருந்து காய்கறிகள் உற்பத்தி குறைந்தாலோ, வரத்து குறைந்தாலே தமிழகத்தில் காய்கறிகள் விலை அதிகரிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow