பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா’ கோஷத்துடன் சொர்க்கவாசலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா’ கோஷத்துடன் சொர்க்கவாசலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பகல்பத்து - ராப்பத்து உற்சவம் நடைபெறும். பகல்பத்து உற்சவம் நிறைவடைந்த நிலையில், வைகுண்ட ஏகாதசி நாளான நேற்று சொர்க்கவாசல் திறப்பு எனும் பரமபதவாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது.
What's Your Reaction?