புரதம், நார்ச்சத்து மிகுந்த தில்லைநாயகம் அரிசி - விவசாயிகள் தகவல்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவில் வையை, மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் சார்பில் மதுரையின் செந்நெல் தில்லை நாயகம் பகுப் பாய்வுக் கூட்டம், உணவுத் திருவிழா நடைபெற்றது

பல வகை சத்துகள் நிறைந்த தில்லைநாயகம் நெல்லை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட வேண்டும் என்று மதுரையில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவில் வையை, மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் சார்பில் மதுரையின் செந்நெல் தில்லைநாயகம் பகுப்பாய்வுக் கூட்டம், உணவுத் திருவிழா நடைபெற்றது. வையை ஒருங்கிணைப்பாளர் ஆ.கருணாகர சேதுபதி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் தங்கம் மலைச்சாமி முன்னிலை வகித்தார்.
What's Your Reaction?