பிரம்மாண்டமாக நடந்த பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி: இளைஞர்களின் கூட்டத்தால் களைகட்டியது
பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சென்னை: பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, மிகுந்த உற்சாகத்துடன் நடன நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அவர்களை ஆச்சரியப் படுத்தும் வகையில், பிரபுதேவா அசாத்தியமாக நடனமாடினார்.
தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமான பிரபுதேவா. பரதம். ஃபோக். வெஸ்டர்ன் என பலவகையான நடனங்களில் சிறப்புற்று விளங்கியதால், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார்.
What's Your Reaction?