பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்
“காசா விவகாரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.

வாஷிங்டன்: “காசா விவகாரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடைபெற்றுக் கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. மேலும், இளம்பெண்கள் உட்பட 251 இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
What's Your Reaction?