பழநி மலைக்கோயில் செல்ல பாதை உருவானது எப்படி?
முருகனின் அறுபடை வீடுகளில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மூன்றாவது படை வீடாகும். இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் மூலவர் நவ பாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்த மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார்

முருகனின் அறுபடை வீடுகளில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மூன்றாவது படை வீடாகும். இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்த மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
குறிப்பாக, தைப்பூச திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பழநி முருகன் மலைக்கோயில் தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 693 படிகளை கடந்துதான் பழநி மலைக்கோயிலுக்கு செல்ல வேண்டும்.
What's Your Reaction?