பஞ்சாப் அணியை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி: 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - பஞ்சாப் எஃப்சி மோதின.

Feb 16, 2025 - 09:00
 0  4
பஞ்சாப் அணியை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி: 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - பஞ்சாப் எஃப்சி மோதின. சென்னையின் எஃப்சி 4-4-2 என்ற பார்மட்டிலும், பஞ்சாப் எஃப்சி 4-2-3-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. 19-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி வீரர் விஷ்ணு தட்சிணாமூர்த்தி த்ரோ செய்த பந்தை பாக்ஸ் பகுதிக்குள் சென்னையின் எஃப்சி வீரர் வில்மர் ஜோர்டான், பஞ்சாப் எஃப்சி அணியின் மெல்ராய் அசிசி ஆகியோர் கட்டுப்படுத்த முயன்றனர்.

அப்போது மெல்ராய் அசிசியின் கையில் பந்து பட்டது. இதனால் சென்னையின் எஃப்சி அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை வில்மர் ஜோர்டான் கில் கோலாக மாற்றி அசத்தினார். இதனால் சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 34-வது நிமிடத்தில் கானர்ஷீல்ட்ஸ் அடித்த கிராஸை பெற்ற வில்மர் ஜோர்டான் கில் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் அவர், அடித்த பந்து கோல்கம்பத்தின் இடது கார்னரில் தடுக்கப்பட்டது. முதல் பாதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow