பஞ்சாப் அணியின் சாம்பியன் கனவும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் - IPL 2025
நடப்பு ஐபிஎல் சீசனில் புது பாய்ச்சலோடு புறப்பட்டுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அந்த அணி அசத்தியுள்ளது. இதற்கான காரணங்களில் ஒருவராக அறியப்படுகிறார் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.

நடப்பு ஐபிஎல் சீசனில் புது பாய்ச்சலோடு புறப்பட்டுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அந்த அணி அசத்தியுள்ளது. இதற்கான காரணங்களில் ஒருவராக அறியப்படுகிறார் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.
கடந்த 2020-ம் ஆண்டு சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். கடந்த சீசனில் கொல்கத்தாவை வெற்றி பெற செய்தார். இப்படி இரு வேறு அணிகளை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இறுதி ஆட்டம் வரை வழிநடத்திய ஒரே கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர், அதே மாயத்தை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அது அவருக்கு கேப்டனாக மூன்று ஐபிஎல் அணிகளுடன் விளையாடும் ஹாட்ரிக் வாய்ப்பாக இருக்கும்.
What's Your Reaction?