பங்கு சந்தை வர்த்தகத்தில் முறைகேடு: 9 நிறுவனங்களுக்கு செபி தடை; ரூ.21.16 கோடி பறிமுதல்
பங்கு சந்தை வர்த்தகத்தில் சட்டவிரோத நடைமுறைகளை பின்பற்றி ஆதாயம் அடைந்த 9 நிறுவனங்களுக்கு, செபி தடை விதித்து, சட்டவிரோதமாக ஈட்டிய ரூ.21.16 கோடியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

பங்கு சந்தை வர்த்தகத்தில் சட்டவிரோத நடைமுறைகளை பின்பற்றி ஆதாயம் அடைந்த 9 நிறுவனங்களுக்கு, செபி தடை விதித்து, சட்டவிரோதமாக ஈட்டிய ரூ.21.16 கோடியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் டீலர்கள் மற்றும் தரகு நிறுவனங்கள் சில சட்டவிரோத நடைமுறைகளை பின்பற்றி உடனடிய ஆதாயம் அடைகின்றன. பிஎன்பி மெட்லைப் இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விற்பனையில் டீலர்களாக செயல்படும் சச்சின் பகல் தக்லி உட்பட 8 இதர நிறுவனங்கள் ‘ப்ரன்ட் ரன்னிங்’ என்ற சட்டவிரோத நடைமுறைகளை பின்பற்றியுள்ளன. இவர்கள் நிலுவையில் உள்ள ஆர்டர்கள், நடைபெறவுள்ள பரிவர்த்தனை நிலவரத்தை முன்கூட்டியே அறிந்து அந்த தகவல்களை தங்களின் கூட்டாளி நிறுவனங்களுக்கு பகிர்வர். இந்த தகவல்கள் பொதுவில் அறிவிக்கப்படாதவை.
What's Your Reaction?