நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யா த நடிகர் ரவிமோகனின் சொத்துகளை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

Aug 20, 2025 - 21:35
 0  6
நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி

சென்னை: படத்தில் நடிக்க முன்பணமாக பெற்ற ரூ. 6 கோடியை திருப்பி செலுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க திட்டமிடப்பட்ட 2 படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்தாண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் படத்துக்கு ரூ. 15 கோடி ஊதியமாக பேசப்பட்டு, ரூ. 6 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow