‘தி ஸ்மைல் மேன்’ - திரை விமர்சனம்
ஒரு விபத்துக்குப் பிறகு மறதி நோயின் தாக்கத்தால் அவதிப்படுகிறார் சிதம்பரம் (சரத்குமார்).

ஒரு விபத்துக்குப் பிறகு மறதி நோயின் தாக்கத்தால் அவதிப்படுகிறார் சிதம்பரம் (சரத்குமார்). சிறப்புப் புலனாய்வுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான அவருடைய நினைவுகள் அனைத்தும் வெகு விரைவில் மறந்து போய்விடும் என்கிறார் மருத்துவர். இப்படிப்பட்டச் சிக்கலான நிலையில், ஒரு ‘சீரியல் கில்லர்’ வழக்கைக் கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் காரணமாக மீண்டும் பணியில் இணைகிறார். அவராலும் அவருடைய குழுவினராலும் அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர முடிந்ததா என்பது கதை.
முதன்மைக் கதாபாத்திர அறிமுகம், அவருக்கான பிரச்சினை, அவர் மீண்டும் பணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் தொடக்கக் காட்சிகள் எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. ஆனால், மக்களும் காவல் துறையும் முடிந்துவிட்டதாக நினைக்கும் ஒரு வழக்கைத் கிளறத் தொடங்கும் காட்சிகள் நத்தை வேகத்தில் நகர்கின்றன. சிதம்பரத்தின் புலனாய்வுக் குழுவில் இருப்பவர்கள் உருப்படியாக ஏதாவது கண்டுபிடிக்க மாட்டார்களா என்று இடைவேளை வரை புலம்ப வைக்கிறார்கள்.
What's Your Reaction?