டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்யுமா இங்கிலாந்து அணி? - ENG vs IND
பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலந்து அணிக்கு 608 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன என்பது குறித்து பார்ப்போம்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் பெற்ற 180 ரன்கள் முன்னிலை உடன் சேர்த்தால் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் 608 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்ய வேண்டும்.
What's Your Reaction?