ஜெர்மனியில் முதலீடுகளை ஈர்த்த தமிழகம்: அடித்தளம் அமைத்த அதிகாரிகளும் பின்புலமும்
முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். முதல்வரின் பயணத்திற்கு ஜெர்மனியில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதன்முறையாக நடைபெற்ற ’தமிழ்நாடு நாள்’ காரணமாக அமைந்தது என கூறப்படுகிறது

புதுடெல்லி: ஜெர்மனியில் ரூ.3,819 கோடிக்கு தமிழகம் பெற்ற முதலீட்டுக்கு தமிழர்களான இரண்டு குடிமைப் பணி அதிகாரிகள் அடித்தளம் இட்டுள்ளனர்.
முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தமிழகம் திரும்பினார். முதல்வரின் பயணத்துக்கு ஜெர்மனியில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதன்முறையாக நடைபெற்ற ’தமிழ்நாடு நாள்’ காரணமாக அமைந்தது என கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் எங்கும் இல்லாத வகையில் தமிழர்களுக்கான இந்த முதல் கொண்டாட்டம் பிராங்பர்ட்டில் நடைபெற்றது. இதை அந்நகரின் இந்திய தூதரகத்தின் கவுன்சில் ஜெனரலாக இருந்த பி.எஸ்.முபாரக் முன்னிறுந்து நடத்தி இருந்தார்.
What's Your Reaction?