ஜிஎஸ்டி சீர்திருத்தம்: ஆவின் நெய், பனீர் விலை குறைப்பு
தற்போது ஜிஎஸ்டி சதவீதம் குறைப்பு காரணமாகவும், பண்டிகை கால சலுகையாகவும் ஆவினில் அனைத்து வகையான நெய்களுக்கும் லிட்டருக்கு ரூ.40 விலை குறைந்துள்ளது.

சென்னை: ஜிஎஸ்டி குறைப்பால், ஆவின் பால் பொருட்களான நெய், பனீர் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் யுஎச்டி பால் மற்றும் பனீர் வகைகளுக்கு விலக்கு அளிக்கவும் நெய், வெண்ணெய், பாலாடை உள்ளிட்ட பால் பொருட்கள், ஐஸ்கிரீம் வகைகள் ஆகியவற்றுக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு நேற்று அமலுக்கு வந்தது.
இதுகுறித்து, ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தற்போது ஜிஎஸ்டி சதவீதம் குறைப்பு காரணமாகவும், பண்டிகை கால சலுகையாகவும் ஆவினில் அனைத்து வகையான நெய்களுக்கும் லிட்டருக்கு ரூ.40 விலை குறைந்துள்ளது. ரூ.120-க்கு விற்கப்பட்ட 200 கிராம் பனீர் ரூ.110-க்கும் வெண்ணெய் விலை ரூ.50 வரையும் குறைந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?