ஜிஎஸ்டி 5%, 0 ஆக குறையும் பொருட்கள்; 40% ஆக உயரும் பொருட்கள் - ஒரு பட்டியல்
குறைக்கப்பட்ட இந்த புதிய வரி விகிதங்கள் நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி அடுக்குகளை 5% மற்றும் 18% என இரண்டாக குறைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குறைக்கப்பட்ட இந்த புதிய வரி விகிதங்கள் நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி குறைப்பால் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும், ஏசி, டிவி, சலவை இயந்திரங்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, தனிநபர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கும் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?